Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
5 தக்காளியும், 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட...
Thakkali Karuppu Ulunthu Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக செய்யப் போகிறீர்களா? ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது இட்லி, தோசையை காலை உணவாக உண்பீர்களா? அப்படியானால் அந்த இட்லி, தோசைக்கு அடிக்கடி சற்று வித்தியாசமான சட்னியை செய்து சாப்பிட தோன்றும்.
உங்கள் வீட்டில் உள்ளோரும் வித்தியாசமான சட்னியை கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், கருப்பு உளுத்தம் பருப்பும் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி இந்த சட்னியை கேட்பார்கள். அந்த அளவில் ருசி அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கருப்பு உளுந்து சட்னி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கருப்பு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிப்பிலை மற்றும் கருப்பு உளுந்தை சேர்த்து, உளுந்தின்
நிறம் லேசாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிய துண்டு
புளியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு வதக்கி, மூடி
வைத்து, தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, அத்துடன் சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
கருப்பு உளுந்து சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











