Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம்
சுரைக்காய் இனிப்பு போளி
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் போளி செய்து சுவைத்திருப்பீர்கள். அதில் பெரும்பாலானோருக்கு தெரிந்தது தேங்காய் போளி தான். ஆனால் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை வித்தியாசமான ஒரு போளியைக் கொடுத்துள்ளது.
இந்த போளியானது சுரைக்காய் கொண்டு செய்யப்படுவது. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த சுரைக்காய் இனிப்பு போளியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பூர்ணம் செய்வதற்கு...
துருவிய சுரைக்காய் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாதி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, பின் பால் சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் கேசரி பவுடர், சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது, அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
இறுதியில் மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து, நான்கு புறகும் மடித்து, மீண்டும் ஒருமுறை லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள போளியை போட்டு, நெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து இறக்கினால், சுரைக்காய் இனிப்பு போளி ரெடி!!!



Click it and Unblock the Notifications