Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ரவையும், மைதாவும் இருந்தா இந்த கொங்கு நாடு இனிப்பு சமோசா செய்யுங்க...1 வாரம் வைச்சு ரசிச்சு சாப்பிடலாம்...!
Sweet Samosa Recipe in Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ரவையும், மைதாவும் இருந்தால், அட்டகாசமான சுவையில் மொறுமொறுப்பான இனிப்பு சமோசாவை செய்து கொடுங்கள். இந்த இனிப்பு சமோசா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இந்த இனிப்பு சமோசாவை பொதுவாக கொங்கு பகுதிளில் சோமோஸ் என்று அழைப்பார்கள். இதற்கு உள்ளே வைக்கும் பூரணத்தை நமக்கு பிடித்த வழிகளில் பிடித்த பொருட்களை வைத்து செய்யலாம். மற்ற சமோசாக்களைப் போல அல்லாமல் இது சில நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். எனவே நீண்ட கால ஸ்னாக்ஸை விரும்புபவர்கள் இதை செய்யலாம்.

உங்களுக்கு இந்த சுவையான இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு சமோசாவின் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ரவை - 1/2 கிலோ
- மைதா - 1/2 கிலோ
பூரணம் செய்ய:
- நிலக்கடலை - 100 கிராம்
- பொட்டுக்கடலை - 100 கிராம்
- வெல்லம் - 1/4 கிலோ
- ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அதேபோல பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார். தேவைப்பட்டால் இதனுடன் முந்திரி, திராட்சை, தேங்காய் போன்றவற்றை கூட சேர்த்துக் கொள்ளலாம்.
-அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
- சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் தேய்த்துக் கொள்ளவும்.
- பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகாக வெட்டவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் தயாராக ஒட்டி ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
- வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்தால் 1 வாரம் கூட வைத்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications