Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
சுரைக்காய் வெச்சு ஒருடைம் இப்படி பாயா செய்யுங்க.. ஆட்டுக்கால் பாயாவே தோத்துப்போயிடும்..
Bottle Gourd Paya Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் பல வீடுகளில் இந்த மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அசைவ உணவுக்கு இணையான சுவையைத் தரும் நல்ல சைவ உணவை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் வீட்டில், பூரி, சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுரைக்காய் பாயா செய்யுங்கள். இந்த பாயாவானது ஆட்டுக்கால் பாயாவையே தோற்கடிக்கும் அளவில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு சுரைக்காய் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுரைக்காய் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சுரைக்காய் - 300 கிராம் (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 1 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 10 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுரைக்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, 7-8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, ஊற வைத்த முந்திரி கசகசாவை நீருடன்
அப்படியே சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் காயுடன் சேர்த்து
கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, பச்சை மிளகாயை கீறிப் போட்டு, 5
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் நன்கு கொதித்த பின், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால் சுவையான சுரைக்காய் பாயா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications