Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
சம்மர் ஸ்பெஷல்: கிர்னி பழ சர்பத்
கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் காற்றின் காரணமாக பலரும் கடுமையான தாகத்தை உணர்வோம். குறிப்பாக மதிய உணவிற்கு பின் பலரும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோம். உங்கள் வீட்டில் உள்ளோரும் மதிய வேளையில் குளிர்ச்சியாக குடிக்க ஏதாவது கேட்டால், கிர்னி பழ சர்பத் செய்து கொடுங்கள்.
கோடைக்காலத்தில் கிர்னி பழம்/முலாம் பழ சீசன் என்பதால், இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அவற்றைக் கொண்டு ஜூஸ் அல்லது சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடைவதோடு, கோடைக்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த சர்பத் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கிர்னி பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்னி பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முலாம்பழம்/கிர்னி பழம் - 1
* சர்பத் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கிர்னி பழத்தை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்க
வேண்டும்.
* பின் அதில் உள்ள சதை பகுதியை ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பூனால் அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு ஐஸ் நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கிர்னி பழ சர்பத் தயார்.
குறிப்பு:
* இந்த சர்பத்தில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சர்பத்திலேயே தேவையான அளவு இனிப்பு இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications