Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சம்மர் ஸ்பெஷல்: கிர்னி பழ சர்பத்
கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் காற்றின் காரணமாக பலரும் கடுமையான தாகத்தை உணர்வோம். குறிப்பாக மதிய உணவிற்கு பின் பலரும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோம். உங்கள் வீட்டில் உள்ளோரும் மதிய வேளையில் குளிர்ச்சியாக குடிக்க ஏதாவது கேட்டால், கிர்னி பழ சர்பத் செய்து கொடுங்கள்.
கோடைக்காலத்தில் கிர்னி பழம்/முலாம் பழ சீசன் என்பதால், இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அவற்றைக் கொண்டு ஜூஸ் அல்லது சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடைவதோடு, கோடைக்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த சர்பத் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கிர்னி பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்னி பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முலாம்பழம்/கிர்னி பழம் - 1
* சர்பத் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கிர்னி பழத்தை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்க
வேண்டும்.
* பின் அதில் உள்ள சதை பகுதியை ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பூனால் அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு ஐஸ் நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கிர்னி பழ சர்பத் தயார்.
குறிப்பு:
* இந்த சர்பத்தில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சர்பத்திலேயே தேவையான அளவு இனிப்பு இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications