Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சம்மர் ஸ்பெஷல்: கிர்னி பழ சர்பத்
கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் காற்றின் காரணமாக பலரும் கடுமையான தாகத்தை உணர்வோம். குறிப்பாக மதிய உணவிற்கு பின் பலரும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோம். உங்கள் வீட்டில் உள்ளோரும் மதிய வேளையில் குளிர்ச்சியாக குடிக்க ஏதாவது கேட்டால், கிர்னி பழ சர்பத் செய்து கொடுங்கள்.
கோடைக்காலத்தில் கிர்னி பழம்/முலாம் பழ சீசன் என்பதால், இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அவற்றைக் கொண்டு ஜூஸ் அல்லது சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடைவதோடு, கோடைக்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த சர்பத் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கிர்னி பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்னி பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முலாம்பழம்/கிர்னி பழம் - 1
* சர்பத் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கிர்னி பழத்தை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்க
வேண்டும்.
* பின் அதில் உள்ள சதை பகுதியை ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பூனால் அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு ஐஸ் நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கிர்னி பழ சர்பத் தயார்.
குறிப்பு:
* இந்த சர்பத்தில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சர்பத்திலேயே தேவையான அளவு இனிப்பு இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











