Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
சம்மர் ஸ்பெஷல்: கிர்னி பழ சர்பத்
கோடைக்காலம் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், அனல் காற்றின் காரணமாக பலரும் கடுமையான தாகத்தை உணர்வோம். குறிப்பாக மதிய உணவிற்கு பின் பலரும் ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க விரும்புவோம். உங்கள் வீட்டில் உள்ளோரும் மதிய வேளையில் குளிர்ச்சியாக குடிக்க ஏதாவது கேட்டால், கிர்னி பழ சர்பத் செய்து கொடுங்கள்.
கோடைக்காலத்தில் கிர்னி பழம்/முலாம் பழ சீசன் என்பதால், இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அவற்றைக் கொண்டு ஜூஸ் அல்லது சர்பத் செய்து குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறைந்து, உடல் குளிர்ச்சியடைவதோடு, கோடைக்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும். முக்கியமாக இந்த சர்பத் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கிர்னி பழ சர்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்னி பழ சர்பத் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முலாம்பழம்/கிர்னி பழம் - 1
* சர்பத் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* ஐஸ் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கிர்னி பழத்தை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்க
வேண்டும்.
* பின் அதில் உள்ள சதை பகுதியை ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு
பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஸ்பூனால் அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு சர்பத்தை ஊற்றி, எலுமிச்சை சாறு சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு ஐஸ் நீரை சேர்த்து கலந்தால், சுவையான
கிர்னி பழ சர்பத் தயார்.
குறிப்பு:
* இந்த சர்பத்தில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் சர்பத்திலேயே தேவையான அளவு இனிப்பு இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications