Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
காரசாரமான பன்னீர் மசாலா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Spicy Paneer Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு பன்னீர் சைடு டிஷ் அதிகமாக செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் பன்னீர் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை காரசாரமான பன்னீர் மசாலாவை செய்யுங்கள்.
இந்த பன்னீர் மசாலா ஹோட்டல்களில் கொடுக்கப்படுவது போன்று அசத்தலான சுவையில் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இந்த பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, புலாவ், நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காரசாரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - சிறிது
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
அரைப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்
தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து புளிப்பில்லாத தயிரை சேர்த்து கிளறி விட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த பொடியை மசாலாவுடன் சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான காரசாரமான பன்னீர் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











