Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சுவையான... காளான் மசாலா
சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள்.
இரவு வேளையில் சப்பாத்தி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள். காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், பூரி போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும்.

சைவ பிரியர்களுக்கு அசைவ உணவின் சுவையைக் கொடுக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால் அது காளான் தான். இத்தகைய காளானில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. உங்களுக்கு காளான் மசாலா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால், கீழே காளான் மசாலாவின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாணலியில் உள்ள கலவையில் இருந்து பச்சை வாசனை முற்றிலும் போனதும், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, உப்பு தூவி கிளறி விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடம் காளானை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் காரமான காளான் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications