Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
சுவையான... காளான் மசாலா
சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள்.
இரவு வேளையில் சப்பாத்தி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள். காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், பூரி போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும்.

சைவ பிரியர்களுக்கு அசைவ உணவின் சுவையைக் கொடுக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால் அது காளான் தான். இத்தகைய காளானில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. உங்களுக்கு காளான் மசாலா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால், கீழே காளான் மசாலாவின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாணலியில் உள்ள கலவையில் இருந்து பச்சை வாசனை முற்றிலும் போனதும், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, உப்பு தூவி கிளறி விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடம் காளானை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் காரமான காளான் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications











