Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
உப்பு சீடை
உங்களுக்கு சீடை ரொம்ப பிடிக்குமா? அதை எப்படி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக உப்பு சீடையின் எளிய செய்முறையைக் கொடுத்துள்ளது. இந்த உப்பு சீடை செய்வதற்கு வேண்டிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு அலையத் தேவையில்லை. வீட்டிலேயே இருக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டே செய்யலாம்.
சரி, இப்போது அந்த உப்பு சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு பொடி - 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன் (வறுத்தது)
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவிற்கு...
முதலில் பச்சரியை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, பின் ஒரு மென்மையான காட்டன் துணியில் பரப்பி உலர வைக்க வேண்டும். அரிசியானது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
உளுத்தம் பருப்பு மாவிற்கு...
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
சீடை மாவிற்கு...
ஒரு பௌலில் மேலே குறிப்பிட்ட அளவுள்ள அரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பு மாவை போட்டு, அத்துடன் எள், துருவிய தேங்காய், சீரகப் பொடி, மிளகுத் தூள், உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்து, 1/2 மணிநேரம் உலர வைக்க வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், உப்பு சீடை ரெடி!!!



Click it and Unblock the Notifications











