Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
பச்சை பட்டாணி கச்சோரி
மாலையில் குளிரும் நேரத்தில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அப்படி சாப்பிட நினைக்கும் வேளையில், வீட்டில் மைதா மற்றும் பச்சை பட்டாணி இருந்தால், அவற்றைக் கொண்டு கச்சோரி செய்து சாப்பிடலாம். மேலும் இது பச்சை பட்டாணி சீசன் என்பதால், பட்டாணி விலை மலிவில் கிடைக்கும்.
எனவே மாலையில் பச்சை பட்டாணியைக் கொண்டு கச்சோரி செய்ய முயற்சி செய்து பாருங்கள். சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உள்ளே வைப்பதற்கு...
பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு மற்றும் நெய் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஈரமான துணியில் கட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுத்து, அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சோம்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து பச்சை பட்டாணியை மசித்து, அத்துடன் சேர்த்து கிளறி, பின் அதில் அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பு பொடி, கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 3 நிமிடம் பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அதில் கொத்தமல்லியை தூவி கிளறி, பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் சிறு வட்டங்களாக தேய்த்து, அதன் நடுவே பச்சை பட்டாணி உருண்டையை வைத்து, கலவை வெளியே வராதவாறு, வட்டமாக மூட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் செய்து வைத்துள்ள கச்சோரிகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பச்சைப் பட்டாணி கச்சோரி ரெடி!!!
Image Courtesy: Twitter



Click it and Unblock the Notifications











