Just In
- 14 min ago எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எள்ளு பன்னீர் மஞ்சூரியன்
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு மஞ்சூரியனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மாலை வேளையில் சற்று சூடாக, புளிப்பாக, காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு மஞ்சூரியனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு எள்ளு பன்னீர் மஞ்சூரியன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு பன்னீர் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிவப்பு வர மிளகாய் பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் (4 காஷ்மீரி மிளகாய்/வர மிளகாயை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* தக்காளி சாஸ் - 1/2 கப்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் பன்னீரை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து, பின் அதன் மேல் எள்ளு விதைகளைத் தூவி இறக்கினால், சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: southindianfoods