Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது இந்த 2 பொருட்களை சேர்த்து செஞ்சா தெய்வீக சுவையோட இருக்குமாம்...!
Sakkarai Pongal Recipe in Tamil: தமிழர் பண்டிகையான பொங்கல் வந்துவிட்டது. அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் தைப்பொங்கலை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். பொங்கல் அன்று அனைவரின் வீட்டிலும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் இரண்டும் வைத்து கடவுளை வழிபடுவார்கள்.
சர்க்கரைப் பொங்கல் வைக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழர் பார்மபரியத்தில் உள்ளது. பொங்கல் நாளன்று தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலை அனைத்து இல்லதரிசிகளும் செய்வார்கள்.

சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தாலும் அதில் சில புதிய பொருட்களை சேர்ப்பது நீங்கள் வைக்கும் பொங்கலின் சுவையை பலமடங்கு அதிகரிக்கும். இந்த தைப்பொங்கலில் வைக்கும் சர்க்கரைப் பொங்கல் கூடுதல் சுவையுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
- வெல்லம் - ஒன்றரை கப்
- நெய் - ¼ கப் (உங்கள் விருப்பத்திற்கே ஏற்ப)
- ஏலக்காய் - 2
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- பால் - 4 ஸ்பூன்
- சமையல் கற்பூரம் - ஒரு சிட்டிகை
- கிராம்பு - 1
- ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- உப்பு - ஒரு சிட்டிகை (விருப்பத்திற்கு ஏற்றது)
- முந்திரி- 10
- திராட்சை - 15
செய்முறை:
- முதலில் ஒரு பானையில் அல்லது குக்கரில் ¼ டீஸ்பூன் நெய்
சேர்த்து, பாசிப்பருப்பை வறுக்கவும்.
- அரிசியை நன்கு கழுவி, அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு
சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும் அல்லது 4 விசில் விடவும்.
அரிசி நன்றாக வெந்ததும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
- அரிசி வேகும் நேரத்தில், வெல்லத்தை உடைத்து, தண்ணீரில் மூழ்கும் வரை
சூடாக்கி, கொதிக்க வைக்கவும். வெல்லம் முழுவதுமாகக் கரையட்டும்.
- பின்னர் அதை வடிகட்டி, குக்கரில் மசித்த அரிசியுடன்
சேர்க்கவும்.
- ஒரு கடாயில், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி பருப்பை
பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, திராட்சையை வறுக்கவும்.
இரண்டையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும.
- அதே வாணலியில், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து விட்டு அடுப்பை
அணைக்கவும். ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து, விரைவாகக் கிளறவும்.
- வறுத்த ஏலக்காய், கிராம்பு, உண்ணக்கூடிய கற்பூரம் மற்றும்
ஜாதிக்காய் பொடியை பொங்கலுடன் சேர்க்கவும்.
- ஏலக்காயை வறுக்காமல் பச்சையாகவும் பொங்கலில் சேர்க்கலாம்.
- அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலந்து, பால் சேர்த்து மிதமான
தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். சமைக்கும் போது தண்ணீர் பற்றவிலை
என்றால் ¼ கப் தண்ணீர் அல்லது கூடுதல் பால் சேர்க்கலாம்.
- இறுதியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்த முந்திரி மற்றும்
திராட்சையைச் சேர்க்கவும்.
- இப்போது தெய்வீகமான சர்க்கரைப் பொங்கல் ரெடி. இந்த சர்க்கரை பொங்கல்
வழக்கமான சர்க்கரைப் பொங்கல் போல அல்லாமல் கூடுதல் சுவையுடன்
இருக்கும்.



Click it and Unblock the Notifications











