Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
புரட்டாசி ஸ்பெஷல் சைவ கறிக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
Saiva Kari Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் நிறைய வீடுகளில் அசைவ உணவுகளை சமைக்கமாட்டார்கள். அதற்கு மாறாக அசைவ உணவின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் சைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?
இந்த வார விடுமுறையில் வாய்க்கு ருசியான, சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என அனைத்திற்கும் ஏற்றவாறான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அருமையான சுவையில் சைவ கறிக்குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். இதை செய்தால், தெருவே மணக்கும்.

உங்களுக்கு சைவ கறிக்குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ கறிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப் (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 7-8
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
ஊற வைப்பதற்கு....
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் இட்லி பாத்திரத்தில் கருணைக்கிழங்கை இரண்டு பெரிய
துண்டுகளாக்கி வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, இட்லி பாத்திர மூடியைத்
திறந்து, கருணைக்கிழங்கை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சற்று
பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கிழங்குடன் மிளகாய் தூள், உப்பு, குழம்பு மிளகாய் தூள்,
புளித்த தயிரை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், முந்திரி, சோம்பு,
தக்காளி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள கிழங்கை சேர்த்து, நன்கு ப்ரை செய்து
தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா இலைகளை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மட்டன் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் நன்கு
பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, கரம் மசாலா சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள
கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சைவ கறிக்குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











