Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
இட்லி, தோசைக்கு ஒருமுறை தக்காளியை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்....
Rottukadai Thakkali Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்ய போகிறீர்களா? அதற்கு சற்று புளிப்பான, அதே சமயம் ருசியான ஒரு சைடு டிஷ் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு ரோட்டுக்கடை தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரோட்டுக்கடை தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* தக்காளி - 3
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 5
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* இட்லி மாவு - 1 சிறிய கரண்டி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் பச்சை மிளகாய் மற்றும் பூண்டையும் நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பொடியாக நறுக்கிய
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சுவைக்கேற்ப உப்பு,
சாம்பார் தூள் மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி குக்கரை மூடி, 5-6 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதம், குக்கரைத் திறந்து, அதில் இட்லி மாவை ஒரு கரண்டி
சேர்த்து நன்கு கிளறி, ஒரு 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
,
* அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பலை சேர்த்து
தாளித்து, தக்காளி சம்பாருடன் சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், ரோட்டுக்கடை சுவையான தக்காளி
சாம்பார் தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications











