Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு... தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை காரச்சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
Rottu Kadai Kara Chutney In Tamil: காலையில் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் சட்னி செய்ய உங்கள் வீட்டில் தேங்காய் எதுவும் இல்லையா? அப்படியானால் கவலைப்படாதீர்கள்.
தேங்காய் சேர்க்காமலேயே அட்டகாசமான சுவையில் தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னியை செய்யலாம். இந்த காரச்சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காத ரோட்டுக்கடை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 7
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 1 1/2 கப் அல்லது 150 கிராம்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், பூண்டு இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும்
புளி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, நறுக்கிய வெங்காயம், உப்பு
மற்றும் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒருமுறை
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து
தாளித்து, அதில் அரைத்த சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி
கிளறி, அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான தேங்காய் சேர்க்காத
ரோட்டுக்கடை கார சட்னி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications











