Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
1 கப் பழைய சாதம் இருக்கா? அப்ப இந்த போண்டாவை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...!
Rice Bonda Recipe in Tamil: சாதம் மீதமாகிவிட்டால் பொதுவாக நாம் அதை பழைய சாதமாக சாப்பிடுவோம், இல்லையெனில் அதை வடகமாக செய்து சாப்பிடுவோம். ஆனால் மிஞ்சி போன சாதத்தை வைத்து சூப்பரான போண்டா செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உண்மைதான் பழைய சாதத்தை வைத்து காரசாரமான மாலை நேர ஸ்னாக்கை செய்யலாம். இந்த போண்டா பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்ததாக இருக்கும். இந்த பதிவில் பழைய சாதத்தை வைத்து எப்படி போண்டா செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- சமைத்த சாதம் - 1 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- கேரட் - 1 (துருவியது)
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 கொத்து
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 1 கப்
- அரிசி மாவு - 1/4 கப்
- பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், 1/2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் ஆகியவ்ற்றை சமைத்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் இந்த கலவையை நன்கு பிசைந்து சிறிய அரிசி உருண்டைகளாக உருட்டவும்.
- இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, தேவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு கொஞ்சம் கெட்டி பதத்தில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
- வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் தயாராக இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சூடான எண்ணெயில் ஒரு சிறிய உருண்டை மாவை விடுவதன் மூலம் நீங்கள் சரிபார்க்கலாம், அது உடனடியாக மேலே வந்தால், எண்ணெய் தயாராக உள்ளது.
- அரிசி உருண்டையை மாவில் நனைத்து பின்னர் எண்ணெயில் போட்டு வறுக்கவும்.
- இந்த உருண்டை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். வாணலியில் இருந்து எடுத்து, அதிகப்படியான எண்ணெயை வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
- இந்த அரிசி போண்டாவிற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
