Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
சீசன் இருக்கும் போதே பச்சை துவரை வாங்கி இப்படி கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Pachai Thuvarai Gravy Recipe In Tamil: குளிர்காலம் என்பதால் தற்போது பச்சை துவரை சீசன் தொடங்கியிருக்கும். இந்த சீசனில் மட்டும் தான் பச்சை துவரையின் சுவையை ருசிக்க முடியும். நீங்கள் இந்த பச்சை துவரையை இதுவரை சாப்பிட்டதில்லை என்றால், மார்கெட் சென்றால் நிச்சயம் இந்த துவரையை வாங்கலாம். இந்த துவரையைக் கொண்டு கிரேவி செய்தால் சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். இது தவிர சாதத்துடனும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு பச்சை துவரை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை துவரை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 150 கிராம் (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை துவரை - 250 கிராம்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 10 பல் (நன்கு தட்டிக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சை துவரையை வாங்கி, அதில் உள்ள பருப்பை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுதது அதில் பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து,
அத்துடன் துவரையையும் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
ஒருமுறை கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் தட்டி வைத்துள்ள பூண்டு
பற்களை சேர்த்து அடுப்பில் வைத்து, மத்து கொண்டு உருளைக்கிழங்கை
மசித்து விட்டு, நீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து விட்டு,
குக்கரை இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை துவரை கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications