Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
1 கப் ரவையும், தயிரும் இருந்தா 10 நிமிசத்தில் இந்த ஈஸியான ஊத்தாப்பம் செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Rava Uthappam Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் டிபன் செய்ய இட்லி, தோசை மாவு எதுவும் இல்லையா? உப்புமா செய்யலாம் என்றால், வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காதா? உங்கள் வீட்டில் 1 கப் ரவையும், கொஞ்சம் தயிரும், சில காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ரவா ஊத்தாப்பத்தை செய்து கொடுங்கள்.
இந்த ரவா ஊத்தாப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். அதோடு, இந்த ரவா ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை சூப்பரான காம்பினேஷனாக இருக்கும். ஒருமுறை இந்த ரவா ஊத்தாப்பத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு ரவா ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா ஊத்தாப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவை
- 1 கப் புளித்த தயிர்
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 கேரட்
- 1 குடை மிளகாய்
- 1 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கப் அளவு ரவையை கொட்டி அதில் அரை ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு கப் அளவு புளித்த தயிரை அதில் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
- ரவையும் தயிரும் ஒன்றாக சேர்ந்து கெட்டியானதும் அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை அதை அப்படியே ஊற வைக்கவும்.
- 10 நிமிடத்திற்கு பிறகு எடுத்து பார்த்தால் மாவு நன்கு ஊறி கெட்டியாக இருக்கும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- மாவை சரியான பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலக்கிய பின் சுமார் ஒரு 5 நிமிடம் வரை அதை ஊற விடவும்.
- பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- தோசைக்கல் சுட்டதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து தோசை ஊற்றுவதை விட சிறிதளவு மொத்தமாக ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின்பு அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை தூவி விட்டு கரண்டியின் மூலம் மெதுவாக அழுத்தி விடவும்.
- ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு மெதுவாக அதன் மேலே கரண்டியை வைத்து அழுத்தி விடவும். அப்பொழுது தான் காய்கறிகளும் நன்கு வெந்து ஊத்தாப்பதோடு சேர்ந்து வரும்.
- இரு புறமும் நன்கு வெந்ததும் ஊத்தாப்பத்தை ஒரு தட்டிற்கு மாற்றி தேங்காய் சட்னியோடு அல்லது தக்காளி சட்னியோடு பரிமாறினால் காலை டிபன் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











