Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
1 கப் ரவையும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க..
Rava Puttu Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சூடாக, அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸை செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்போது அவர்களுக்கு சத்தானதாகவும், அதே சமயம் சுவையானதாகவும் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு புட்டு பிடிக்குமா? ஆனால் வீட்டில் புட்டு மாவு இல்லையா? கவலை வேண்டாம்.
வீட்டில் 1 கப் ரவையும், 1/4 கப் தேங்காயும் இருந்தால் போதும், ருசியான ரவா புட்டு செய்யலாம். இந்த ரவா புட்டு ஒரு சிறந்த மாலை நேர ஸ்நாக்ஸாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த ரவா புட்டு 10 நிமிடத்திற்குள் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா புட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் ரவையை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* ரவையை நன்கு வறுத்ததும், அதை இறக்கி குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* ரவை நன்கு குளிர்ந்த பின், 1/4 கப் நீரை எடுத்து, அத்துடன் 1/4
டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, புட்டு மாவு பதத்திற்கு
உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 ஏலக்காயின் விதைகளை மட்டும் தட்டிப் போட
வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை 1/4 கப் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் இட்லி தட்டில் ஒரு துணியை வைத்து, அதன் துணியில் பிசைந்து
வைத்துள்ள ரவையை சேர்த்து மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 5-7
நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் வேக வைத்த புட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் 2
டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை
மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறினால், சுவையான ரவா
புட்டு தயார்.



Click it and Unblock the Notifications