Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
1 கப் ரவை இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும்.. சத்தானதும் கூட..
Rava Masala Adai Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ரவை இருந்தால், அந்த ரவையைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து அருமையான சுவையில் மசாலா அடை தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த அடை தோசை சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை சாப்பிட மறுப்பவரானால், அவர்களுக்கு இப்படி காய்கறிகளை சேர்த்து அடை தோசை செய்து கொடுங்கள். இதனால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா மசாலா அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா மசாலா அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* ரவை - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
அடைக்கு...
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கேரட் - 1 (துருவியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (துருவியது)
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
மேலே தூவுவதற்கு...
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அத்துடன் ரவை மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, ரவையை கரண்டியால் மசித்து விட வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தோசை மாவு
பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து,
பின் துருவிய கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, ஆப்ப
சோடா, கொத்தமல்லியை சேர்த்து நன்கு அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குழம்பு
மிளகாய் தூள், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து
கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள அடை மாவை எடுத்து தோசை போன்று ஊற்றி, மேலே மிளகாய் தூள்
கலந்து வைத்துள்ள வெங்காயத்தை சிறிது தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும்,
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா மசாலா அடை
தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











