Latest Updates
-
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்!
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும்
Rajasthani Pancharatna Dal Recipe in Tamil: சப்பாத்தி, பூரிக்கு ஒரே மாதிரியான குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் ராஜஸ்தான் ஸ்டைலில் ஒரு பஞ்சரத்ன பருப்புக் குழம்பை செய்யுங்கள். இந்த ராஜஸ்தானி பருப்பு குழம்பு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை ஒருமுறை செய்தால், நிச்சயம் வாரம் ஒருமுறை இந்த குழம்பை வீட்டில் செய்வீர்கள். அந்த அளவிற்கு எளிமையாகவும், செய்வதற்கு சுலபலமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வித்தியாசமான ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் பாசிப் பருப்பு
- 1/4 கப் மைசூர் பருப்பு (சிவப்புப் பருப்பு)
- 1/4 கப் பாசிப் பயறு
- 1/4 கப் கருப்பு உளுந்து
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் உப்பு
- 3 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் நெய்
பருப்பு தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 4 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 3/4 கப் தக்காளி (நறுக்கியது)
- 1 டீஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 3/4 கப் தண்ணீர்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
- தேவையான அளவு உப்பு
அலங்கரிக்க:
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- அரை ஸ்பூன் கசூரி மேத்தி
- 1 டீஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் அனைத்து பருப்புகளையும் நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
- ஊறவைத்த பருப்புகளுடன் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நெய் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும், பின்னர் 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- ஒரு வாணலியில் நெய்யைச் சூடாக்கி, சீரகம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி சேர்த்து, குழைந்துபோகும் வரை சமைக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தொக்கு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
- அதன்பின் வேகவைத்த பருப்பு வகைகளை சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி, 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- இறுதியாக கரம் மசாலா, கசூரி மேத்தி, கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து, உப்பு சரிபார்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் சுவையான ராஜஸ்தானி ஸ்டைல் பஞ்சரத்ன கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications