Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் ராகி மாவு, 1 கப் பாசிப்பருப்பு வெச்சு.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Ragi Pasiparuppu Uthappam Recipe in Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? சற்று சத்தான அதே சமயம் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடுமாறான காலை உணவை செய்ய வேண்டுமா? வீட்டில் ராகி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த ராகியுடன், பாசிப்பருப்பை சேர்த்து ஊத்தாப்பம் செய்யுங்கள். இந்த ஊத்தாப்பம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். இந்த ஊத்தாப்பத்திற்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது. அப்படியே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
சுத்தமான நீரை ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்து, ஊற வைத்த பாசிப்பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன்
ராகி மாவை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சோடா உப்பையும் சேர்த்து நன்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,
கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கலந்து வைத்துள்ள தோசை
மாவை கல்லில் ஊற்றி சற்று மொத்தமாக ஊத்தாப்பம் போன்று தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் கலந்து வைத்துள்ள தக்காளி வெங்காய கலவையை வைத்து
பரப்பி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்க
வேண்டும்.
* பின்பு ஊத்தாப்பத்தை திருப்பிப் போட்டு, அழுத்தி விட்டு, சிறிது
நேரம் வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி பாசிப்பருப்பு ஊத்தாப்பம்
தயார்.



Click it and Unblock the Notifications






