Latest Updates
-
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...!
தினமும் காலையில் 1 டம்ளர் இந்த ராகி பாலை குடிங்க..அப்புறம் பாருங்க எப்படி ஒல்லியானீங்க-ன்னு கேப்பாங்க..
Ragi Paal Recipe In Tamil: காலை வேளையில் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியமாசமாக சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா?
அப்போது ராகியை தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து, அந்த பாலை அடுப்பில் வைத்து, நன்கு காய்ச்சி இறக்கி, சுவைக்கேற்ப இனிப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறினால், சுவையான ராகி பால் தயார். இந்த பாலை அவ்வப்போது காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் வலுவாக இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.

உங்களுக்கு ராகி பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி - 4 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் - 1
* உப்பு - 1 சிட்டிகை
* நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ராகியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை 2-3 முறை கைகளால்
நன்கு பிசைந்து விட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த ராகியை சேர்த்து,
அத்துடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை விரித்து,
அதில் அரைத்த ராகியை ஊற்றி, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த ராகி பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து, தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 1 சிட்டிகை உப்பு
மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை தட்டிப் போட்டு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ராகி பால் தயார்.



Click it and Unblock the Notifications


