Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
தினமும் காலையில் 1 டம்ளர் இந்த ராகி பாலை குடிங்க..அப்புறம் பாருங்க எப்படி ஒல்லியானீங்க-ன்னு கேப்பாங்க..
Ragi Paal Recipe In Tamil: காலை வேளையில் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியமாசமாக சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா?
அப்போது ராகியை தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்து, அந்த பாலை அடுப்பில் வைத்து, நன்கு காய்ச்சி இறக்கி, சுவைக்கேற்ப இனிப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறினால், சுவையான ராகி பால் தயார். இந்த பாலை அவ்வப்போது காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் வலுவாக இருக்கும் மற்றும் தொப்பையும் குறையும்.

உங்களுக்கு ராகி பாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி - 4 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* தண்ணீர் - தேவையான அளவு
* ஏலக்காய் - 1
* உப்பு - 1 சிட்டிகை
* நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ராகியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை 2-3 முறை கைகளால்
நன்கு பிசைந்து விட்டு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுத்தமான நீரை ஊற்றி, இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த ராகியை சேர்த்து,
அத்துடன் தேங்காய் துண்டுகளையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் மெல்லிய துணியை விரித்து,
அதில் அரைத்த ராகியை ஊற்றி, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த ராகி பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து, தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் 1 சிட்டிகை உப்பு
மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஏலக்காயை தட்டிப் போட்டு
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு சுடுநீரை ஊற்றி நன்கு கிளறி கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ராகி பால் தயார்.



Click it and Unblock the Notifications


