Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
4 கப் ராகி மாவும், 2 கைப்பிடி முருங்கைக்கீரையும் வெச்சு.. காலையில் இந்த சத்தான டிபனை செய்யுங்க..
Ragi Murungai Keerai Adai Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வீட்டில் ராகி மாவு உள்ளதா? அதே சமயம் முருங்கைக்கீரையும் உள்ளதா? அப்படியானால் ராகி மாவையும், முருங்கைக்கீரையையும் கொண்டு அருமையான சுவையில் அடை செய்யுங்கள்.
இந்த ராகி முருங்கைக்கீரை அடை சைடு டிஷ் எதுவும் இல்லாமல், வெறுமனே சாப்பிடவும் நன்றாக இருக்கும் ஒருவேளை சைடு டிஷ் வேண்டுமானால், தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த அடை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி முருங்கைக்கீரை அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி முருங்கைக்கீரை அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 6
* சோம்பு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* ராகி மாவு - 4 கப்
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வரமிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வரமிளகாய், சோம்பு மற்றும் சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்து, அதில் அரைத்து
வைத்துள்ள மிளகாய் விழுது, தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடியாக
நறுக்கிய வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து கைகளால் கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அடை மாவு பதத்திற்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பின் சிறிது அடை மாவை எடுத்து உருட்டி, அதை தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள அடையைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.



Click it and Unblock the Notifications