Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு... மழைக்காலத்துல சாப்பிட சிறந்த ஸ்னாக்ஸ் இதுதான்... எப்படி செய்யணும் தெரியுமா?
Andhra Special Punugulu Recipe: மழைக்காலம் வந்தாலே ஜில்லென்ற க்ளைமேட்டுக்கு சூடான பலகாரம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். வழக்கமாக பஜ்ஜி, போண்டா மற்றும் மிக்சர் சாப்பிடுவதற்குப் பதிலாக அக்கட தேசத்தை சேர்ந்த ஆந்திரா புனுகுலு செய்து சாப்பிடுவது உங்கள் மழைக்கால மாலை நேரப்பொழுதை மேலும் ரம்மியமானதாக மாற்றும்.
புனுகுலு என்பது ஆந்திராவில் ஒரு பிரபலமான தேநீர் நேர சிற்றுண்டியாகும், இது அரிசி, உளுத்தம் பருப்பை ஊறவைத்து புளிக்கவைத்து தயாரிக்கப்படுகிறது. சிலசமயங்களில் எஞ்சியிருக்கும் மாவைப் பயன்படுத்தியும் புனுகுலு செய்யலாம். இது நம்ம மதுரை வெள்ளையப்பம் போன்றது. இந்த சுவையான மாலை நேர பொருளை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் இட்லி மாவு
- 2 டீஸ்பூன் மைதா
- 2 டீஸ்பூன் அரிசி மாவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 3-4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை
- ½ தேக்கரண்டி உப்பு
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு
- ஒருவேளை உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1 கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதை நன்றாக மாவாக அரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக
ஊறவைத்து, அதிக தண்ணீர் சேர்க்காமல் மென்மையான பேஸ்டாக
அரைக்கவும்.
- உப்பு சேர்த்து இதை 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதனுடன்
நீங்கள் 2 டீஸ்பூன் புளிப்பு தயிர் சேர்க்கலாம் மற்றும்
புளிக்கவைப்பதைத் தவிர்க்கலாம், ஆனால் புளித்த மாவே சரியான சுவையைத்
தரும்.
- இதில் பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை,
வெங்காயம் சேர்க்கவும்.
- இத்துடன் அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவை பஞ்சுபோன்றதாக மாற்ற கரண்டியால் இதை நன்றாக அடிக்கவும். இது
ஒரு சரியான அமைப்பைக் கொடுக்கிறது மற்றும் உள் பகுதியை மென்மையாக
வைத்திருக்கும்.
- ஆழமாக வறுக்க எண்ணெயை சூடாக்கவும்.
- மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் ஆழமாக வறுக்கவும்.
- ஒரு பக்கம் கோல்டன் பிரவுன் கலர் ஆனதும், போண்டாக்களை
புரட்டவும்.
- இருபுறமும் ஆழமாக வறுக்கப்பட்ட பின் கடாயில் இருந்து வெளியே
எடுக்கவும்.
- பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்.
- சூடான ஆந்திரா புனுகுலு தயார். இதை தேங்காய் சட்னி மற்றும் கார
சட்னியுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications











