Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு... மழைக்காலத்துல சாப்பிட சிறந்த ஸ்னாக்ஸ் இதுதான்... எப்படி செய்யணும் தெரியுமா?
Andhra Special Punugulu Recipe: மழைக்காலம் வந்தாலே ஜில்லென்ற க்ளைமேட்டுக்கு சூடான பலகாரம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். வழக்கமாக பஜ்ஜி, போண்டா மற்றும் மிக்சர் சாப்பிடுவதற்குப் பதிலாக அக்கட தேசத்தை சேர்ந்த ஆந்திரா புனுகுலு செய்து சாப்பிடுவது உங்கள் மழைக்கால மாலை நேரப்பொழுதை மேலும் ரம்மியமானதாக மாற்றும்.
புனுகுலு என்பது ஆந்திராவில் ஒரு பிரபலமான தேநீர் நேர சிற்றுண்டியாகும், இது அரிசி, உளுத்தம் பருப்பை ஊறவைத்து புளிக்கவைத்து தயாரிக்கப்படுகிறது. சிலசமயங்களில் எஞ்சியிருக்கும் மாவைப் பயன்படுத்தியும் புனுகுலு செய்யலாம். இது நம்ம மதுரை வெள்ளையப்பம் போன்றது. இந்த சுவையான மாலை நேர பொருளை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் இட்லி மாவு
- 2 டீஸ்பூன் மைதா
- 2 டீஸ்பூன் அரிசி மாவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 3-4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை
- ½ தேக்கரண்டி உப்பு
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு
- ஒருவேளை உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1 கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதை நன்றாக மாவாக அரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக
ஊறவைத்து, அதிக தண்ணீர் சேர்க்காமல் மென்மையான பேஸ்டாக
அரைக்கவும்.
- உப்பு சேர்த்து இதை 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதனுடன்
நீங்கள் 2 டீஸ்பூன் புளிப்பு தயிர் சேர்க்கலாம் மற்றும்
புளிக்கவைப்பதைத் தவிர்க்கலாம், ஆனால் புளித்த மாவே சரியான சுவையைத்
தரும்.
- இதில் பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை,
வெங்காயம் சேர்க்கவும்.
- இத்துடன் அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவை பஞ்சுபோன்றதாக மாற்ற கரண்டியால் இதை நன்றாக அடிக்கவும். இது
ஒரு சரியான அமைப்பைக் கொடுக்கிறது மற்றும் உள் பகுதியை மென்மையாக
வைத்திருக்கும்.
- ஆழமாக வறுக்க எண்ணெயை சூடாக்கவும்.
- மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் ஆழமாக வறுக்கவும்.
- ஒரு பக்கம் கோல்டன் பிரவுன் கலர் ஆனதும், போண்டாக்களை
புரட்டவும்.
- இருபுறமும் ஆழமாக வறுக்கப்பட்ட பின் கடாயில் இருந்து வெளியே
எடுக்கவும்.
- பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்.
- சூடான ஆந்திரா புனுகுலு தயார். இதை தேங்காய் சட்னி மற்றும் கார
சட்னியுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications
