Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு... மழைக்காலத்துல சாப்பிட சிறந்த ஸ்னாக்ஸ் இதுதான்... எப்படி செய்யணும் தெரியுமா?
Andhra Special Punugulu Recipe: மழைக்காலம் வந்தாலே ஜில்லென்ற க்ளைமேட்டுக்கு சூடான பலகாரம் சாப்பிட அனைவரும் விரும்புவார்கள். வழக்கமாக பஜ்ஜி, போண்டா மற்றும் மிக்சர் சாப்பிடுவதற்குப் பதிலாக அக்கட தேசத்தை சேர்ந்த ஆந்திரா புனுகுலு செய்து சாப்பிடுவது உங்கள் மழைக்கால மாலை நேரப்பொழுதை மேலும் ரம்மியமானதாக மாற்றும்.
புனுகுலு என்பது ஆந்திராவில் ஒரு பிரபலமான தேநீர் நேர சிற்றுண்டியாகும், இது அரிசி, உளுத்தம் பருப்பை ஊறவைத்து புளிக்கவைத்து தயாரிக்கப்படுகிறது. சிலசமயங்களில் எஞ்சியிருக்கும் மாவைப் பயன்படுத்தியும் புனுகுலு செய்யலாம். இது நம்ம மதுரை வெள்ளையப்பம் போன்றது. இந்த சுவையான மாலை நேர பொருளை எப்படி செய்யலாமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் இட்லி மாவு
- 2 டீஸ்பூன் மைதா
- 2 டீஸ்பூன் அரிசி மாவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 3-4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை
- ½ தேக்கரண்டி உப்பு
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- எண்ணெய் வறுக்கத் தேவையான அளவு
- ஒருவேளை உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் 2 கப் இட்லி அரிசி மற்றும் 1 கப் உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதை நன்றாக மாவாக அரைத்து 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.
- உங்களிடம் இட்லி மாவு இல்லையென்றால் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக
ஊறவைத்து, அதிக தண்ணீர் சேர்க்காமல் மென்மையான பேஸ்டாக
அரைக்கவும்.
- உப்பு சேர்த்து இதை 6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதனுடன்
நீங்கள் 2 டீஸ்பூன் புளிப்பு தயிர் சேர்க்கலாம் மற்றும்
புளிக்கவைப்பதைத் தவிர்க்கலாம், ஆனால் புளித்த மாவே சரியான சுவையைத்
தரும்.
- இதில் பொடியாக நறுக்கிய மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை,
வெங்காயம் சேர்க்கவும்.
- இத்துடன் அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- மாவை பஞ்சுபோன்றதாக மாற்ற கரண்டியால் இதை நன்றாக அடிக்கவும். இது
ஒரு சரியான அமைப்பைக் கொடுக்கிறது மற்றும் உள் பகுதியை மென்மையாக
வைத்திருக்கும்.
- ஆழமாக வறுக்க எண்ணெயை சூடாக்கவும்.
- மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போடவும்.
ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் ஆழமாக வறுக்கவும்.
- ஒரு பக்கம் கோல்டன் பிரவுன் கலர் ஆனதும், போண்டாக்களை
புரட்டவும்.
- இருபுறமும் ஆழமாக வறுக்கப்பட்ட பின் கடாயில் இருந்து வெளியே
எடுக்கவும்.
- பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை வடிகட்டவும்.
- சூடான ஆந்திரா புனுகுலு தயார். இதை தேங்காய் சட்னி மற்றும் கார
சட்னியுடன் பரிமாறினால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications
