Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
பஞ்சாப் ஸ்டைல் பூண்டு சட்னி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சுபாருங்க... இட்லி, தோசைக்கு வேற லெவல் சைடிஷா இருக்கும்!
Punjab Style Garlic Chutney Recipe in Tamil: தினமும் வீட்டில் காலை அல்லது இரவு இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி செய்வது பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிவிட்ட ஒன்று. அதற்கும் விதவிதமாய் வித்தியாசமாய் சட்னி குழம்பு வகைகளை செய்வது என்பது தினமும் தொடரும் முடிவிலா போராட்டமாக மாறிவிட்டது. என்ன தான் சைடிஷை சுவையாக செய்தாலும் நாளடைவில் அது அலுப்பு தட்டிவிடும். அதற்கு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? சில பொருட்களை கூட்டி அல்லது குறைத்து சுவையை தான் மாற்ற முடியும். ஒவ்வொரு ஊரிலும் சட்னிகளின் சுவை வேறுபட காரணம் இதுதான்.
பொதுவாக பூண்டு சட்னி என்பது இட்லி, தோசைக்கு சைடிஷாக செய்யப்படும் ஒரு தரமான சைடிஷாகும். இந்த காரமான பூண்டு சட்னி என்பது பொதுவாக வர மிளகாய் மாற்றும் பூண்டு வைத்து தயாரிக்கப்படும். ஆனால் பஞ்சாப் ஸ்டைல் பூண்டு சட்னி என்பது இந்த இரண்டுடன் வேறுசில பொருட்களை சேர்த்து கூடுதல் சுவையுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பஞ்சாப் பூண்டு சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும். மேலும் இதை சாதத்தில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம்.

உங்களுக்கு பஞ்சாப் ஸ்டைல் பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பஞ்சாப் பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- ¼ கப் துருவிய தேங்காய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 தக்காளி நறுக்கியது
- 4 வர மிளகாய்
- 1 கப் புளிக்கரைசல்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- ½ டீஸ்பூன் வெல்லம்
தாளிக்க:
- 3 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- அரை கப் பூண்டு(நறுக்கியது)
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் 4 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கிய அரை கப் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- பூண்டு பொன்னிறமாகும் வரை வதக்கி அதை தனியாக எடுத்து வைக்கவும்.
- மசாலா விழுது தயாரிக்க, ஒரு மிக்ஸி ஜாரில் ¼ கப் தேங்காய், 1 டீஸ்பூன் கடுகு, 1 தக்காளி மற்றும் 4 வர மிளகாயை எடுத்துக் கொள்ளவும்.
- தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் 1 கப் புளிக்கரைசல், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், ¾ டீஸ்பூன் உப்பு மற்றும் ½ டீஸ்பூன் வெல்லத்தை எடுத்துக் கொள்ளவும்.
- நன்றாகக் கலந்து, 5 நிமிடங்கள் அல்லது அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- தயார் செய்த மசாலா விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் வறுத்த பூண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பின் எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- அவ்வளவுதான் பஞ்சாபி ஸ்டைல் பூண்டு தொக்கு ரெடி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











