1 கைப்பிடி புதினாவும், 1 கைப்பிடி மல்லியும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்

Posted By:

Pudina Malli Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருகிறீர்களா? உங்கள் வீட்டில் புதினாவும், கொத்தமல்லியும் உள்ளதா ? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அற்புதமான சுவையில் சட்னியை செய்யுங்கள்.

இப்படி சட்னி செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னி செய்வதென்று சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.

Pudina Malli Chutney How To Make a Mint Coriander Chutney

உங்களுக்கு புதினா மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* வரமிளகாய் - 5
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 2 கொத்து

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீ
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி வேகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா, மல்லி, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா மல்லி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 4, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion