Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
புடலங்காயை வைச்சு பொரியல் செய்யாம இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Pudalangai Chutney Recipe in Tamil: காய்கறிகளை வைத்து பொதுவாக குழம்பும், பொரியலும்தான் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அவற்றை வைத்து சட்னியும் செய்யலாம். இந்த காய்கறி சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி உங்கள் வீட்டில் புடலங்காய் உள்ளதா? பொதுவாக வீட்டில் புடலங்காய் இருந்தால், அதை வைத்து பொரியல், கூட்டு தான் செய்வோம். ஆனால் புடலங்காயை வைத்து சட்னி அரைத்து எப்படிஇ இருக்கும்? அது சுவையாகவா இருக்கும்? என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மையில் இந்த புடலங்காய் சட்னியை ஒருமுறை செய்து பாருங்கள், இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சட்னியை செய்தால், இனிமேல் புடலங்காயை வாங்கினால் இந்த சட்னியை தான் செய்வீர்கள். அந்த அளவிற்கு சட்னி வேற லெவலில் இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். இந்த புடலங்காய் சட்னி செய்வதற்கு எளிதானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும், சுவையானதும் கூட. எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த சட்னி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பதிவில் சுவையான புடலங்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 சிறிய புடலங்காய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 3 காஷ்மீரி மிளகாய்
- ¾ கப் துருவிய தேங்காய்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கு ஏற்ப
- 1 சிறிய துண்டு புளி
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 வர மிளகாய்
- பெருங்காயம் சிறிதளவு
செய்முறை:
- முதலில் புடலங்காயை நீளவாக்கில் நறுக்கவும். பின்னர் விதைகளை நீக்கி குத்து மதிப்பாக நறுக்கவும்.
- பின்னர் மேலும், ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். உளுத்தம்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். உளுத்தம்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய புடலங்காயைச் சேர்க்கவும். அவை பாதியாக சுருங்கும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் மற்றும் ஒரு சிறிய உருண்டை புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் முழுமையாக ஆற விடவும்.
- பின்னர் இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, தேவையான தண்ணீர் சேர்த்து கரடுமுரடான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வைக்கவும்.
- ஒரு சிறிய கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு தாளித்து அதனை சட்னி மீது கொட்டி கிளறவும்.
- சூப்பரான புடலங்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- உங்கள் கூடுதல் சுவை தேவைப்பட்டால் புடலங்காயுடன் ஒரு தக்காளி சேர்த்து வதக்கி சட்னி அரைக்கவும்.



Click it and Unblock the Notifications











