Latest Updates
-
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும்
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Poori Masala In Tamil: விடுமுறை நாட்களில் காலை வேளையில் பெரும்பாலும் பூரி தான் உங்கள் வீட்டு டிபனாக இருக்குமா? இந்த பூரி செய்தாலே அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சுவையில் தான் இந்த மசாலாவை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை இந்த பக்குவத்தில் உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்கள். இப்படி மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகளவு பூரியை சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிறது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (மசித்தது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வெங்காயத்தின் நிறம் மாறி, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கன் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்
தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, மூடி வைத்து வெங்காயம் மென்மையாகி மசாலாவின் பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை
சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பூரி மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications