Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
2 பூண்டு இருந்தா இந்த தொக்கு செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும்...!
Poondu Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற எண்ணம் நம்மிடம் வந்து விட்டது.
உண்மையில் இட்லி, தோசைக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் பூண்டு தொக்கு 1 வாரம் வரை கூட வைத்த சாப்பிடக்கூடியது. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

பூண்டு இதன் மூலப்பொருளாக இருந்தாலும் இதனுடன் சேர்க்கப்படும் தக்காளி, வெங்காயம் போன்றவை இதன் சுவையை மேலும் அதிகரிக்கும். இந்த பதிவில் சூப்பரான பூண்டு தொக்கை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- முழு பூண்டு - 2
- தக்காளி - 3
- வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 5
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மல்லி தூள் - ஒன்றரை ஸ்பூன்
- மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - அரை ஸ்பூன்
- வெந்தயம் - சிறிதளவு
- சீரகம் - கால் ஸ்பூன்
செய்முறை:
- பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளி மற்றும் கொத்தமல்லி தழையை சிறியதாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.வெங்காயம் சற்றே வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி பொன்னிறமானதும் பொரித்து வைத்திருக்கும், பூண்டு + இஞ்சியை சேர்த்து கிளறவும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் ஆன பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- தக்காளி குழையும் அளவிற்கு வெந்தவுடன், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இந்த பூண்டு தொக்கு, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
- இதனை காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் அடைத்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
- ஒருவேளை உங்களுக்கு குழம்பாக வேண்டுமென்றால், இறுதியில் சற்றே தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, உப்பை சரிபார்த்துக் கொள்ளவும்.



Click it and Unblock the Notifications
