Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
10 பல் பூண்டு 1 கப் சாதம் இருந்தா போதும் சூப்பரான சாப்பாடு ரெடி.. இதை செஞ்சு எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Poondu Sadham Recipe in Tamil: தற்போது இருக்கும் காலநிலை மாற்றத்தால் ஏராளமானோர் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வோம். இது போன்ற சூழலில் நாம் உணவில் செய்யும் ஆரோக்கிய மாறுதல்கள் நல்ல மாற்றத்தை தரும். பூண்டை நாம் உணவில் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியமான பல நன்மைகளை தரும்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் எடை குறைப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல பலனை தரும் ஆற்றலை கொண்டிருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த பதிவில் பூண்டை வைத்து எப்படி சாதம் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 10 பல்
- சாதம் - 1 கப்
- வரமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டேப்ளேஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- சாதம் வேக வைக்கும் போது 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறுதளவு உப்பு
சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கும் போது சாதம் ஒன்றோடு
ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.
- தோல் உரித்து வைத்த பூண்டை உரலில் சேர்த்து மசித்து கொள்ளவும்.
- உரல் இல்லாதவர்கள் மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்
கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை
சேர்க்கவும்.
- அடுத்து அதனுடன் உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக
மாறும் வரை வறுக்கவும்.
- பூண்டு சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- காரத்திற்கேற்ப வரமிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து
நன்கு கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து அதனுடன் சாதம் சேர்த்து நன்கு
கிளறவும்.
- அதனுடன் மல்லி இலை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை
அணைத்து விடவும்.
- சுவையான ஆரோக்கியமான பூண்டு சாதம் தயார்.



Click it and Unblock the Notifications











