Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
10 பல் பூண்டு 1 கப் சாதம் இருந்தா போதும் சூப்பரான சாப்பாடு ரெடி.. இதை செஞ்சு எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Poondu Sadham Recipe in Tamil: தற்போது இருக்கும் காலநிலை மாற்றத்தால் ஏராளமானோர் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்வோம். இது போன்ற சூழலில் நாம் உணவில் செய்யும் ஆரோக்கிய மாறுதல்கள் நல்ல மாற்றத்தை தரும். பூண்டை நாம் உணவில் சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியமான பல நன்மைகளை தரும்.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் எடை குறைப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இது இரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றில் நல்ல பலனை தரும் ஆற்றலை கொண்டிருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த பதிவில் பூண்டை வைத்து எப்படி சாதம் செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பூண்டு - 10 பல்
- சாதம் - 1 கப்
- வரமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டேப்ளேஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- சாதம் வேக வைக்கும் போது 1 ஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறுதளவு உப்பு
சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கும் போது சாதம் ஒன்றோடு
ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.
- தோல் உரித்து வைத்த பூண்டை உரலில் சேர்த்து மசித்து கொள்ளவும்.
- உரல் இல்லாதவர்கள் மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்
கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை
சேர்க்கவும்.
- அடுத்து அதனுடன் உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக
மாறும் வரை வறுக்கவும்.
- பூண்டு சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுக்கவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- காரத்திற்கேற்ப வரமிளகாய் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து
நன்கு கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து அதனுடன் சாதம் சேர்த்து நன்கு
கிளறவும்.
- அதனுடன் மல்லி இலை மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை
அணைத்து விடவும்.
- சுவையான ஆரோக்கியமான பூண்டு சாதம் தயார்.



Click it and Unblock the Notifications