Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
இட்லிக்கு ஒருமுறை பூண்டு கார சட்னியை இப்படி செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Garlic Kara Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சட்னியை செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அடிக்கடி கார சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் கார சட்னியை செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை இந்த பூண்டு கார சட்னியை செய்து பாருங்கள். இந்த சட்னி நன்கு காரசாரமாகவும், ருசியாகவும் இருக்கும். இப்படி கார சட்னியை செய்தால், 2 இட்லி சாப்பிடுபவர்கள் 1 இட்லியை எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரமிளகாய் - 10
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* பூண்டு - 25
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* சின்ன வெங்காயம் - 10
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்த்ம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வரமிளகாய், காஷ்மீரி மிளகாய், பூண்டு
சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சிறிது நீரை ஊற்றி, தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பூண்டு கார சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











