Latest Updates
-
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க..
இட்லிக்கு ஒரு டைம் இந்த ஸ்டைலில் பூண்டு சட்னி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Poondu Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? இட்லிக்கு பொதுவாக சற்று புளிப்பான சட்னி இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் தக்காளி சட்னியை செய்ய முடியாது அல்லவா? எனவே இன்று பூண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைலில் செய்யுங்கள். இதனால் சட்னி வேற லெவல் சுவையில் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்யும் போது உங்கள் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பூண்டு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூண்டு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 10
* உளுத்தம் பருப்பு - 1/4 கப் (50 கிராம்)
* பூண்டு - 1/4 கிலோ
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், புளியை சேர்த்து பச்சை வாசனை போக எண்ணெயில் வதக்க
வேண்டும்.
* பின் அதில் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து, பச்சை வாசனை போய் நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் குளிர வைத்ததை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்
பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி,
சட்னியில் உள்ள நீர் சற்று வற்றும் வரை கிளறி இறக்கினால், சுவையான
பூண்டு சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications