Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
1 கப் பட்டாணி இருந்தா 10 நிமிஷத்தில் இந்த ஈஸியான குருமாவை செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு தாறுமாறா இருக்கும்!
Pattani kurma recipe in Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்தி, பூரிக்கு என்ன சைடிஷ் செய்யலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு சூப்பரான பச்சை பட்டாணி கிரேவியை செய்யலாம். இந்த பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை மற்றும் சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். அனைத்திற்கும் மேல் இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம்.
பட்டாணி புரோட்டின் நிறைந்ததாக இருப்பதால் இது உடலைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இந்த பட்டாணி கிரேவி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் படி அருமையான சுவையில் இருக்கும். குறிப்பாக இந்த பட்டாணி கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஈஸியான பச்சை பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுவையான பச்சை பட்டாணி கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை பட்டாணி - 100 கிராம்
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- கறிவேப்பிலை - 1 கொத்து
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சாம்பார் தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - கால் டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 10
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் பட்டாணியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின் சாம்பார் தூள் போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1 நிமிடம் வதக்கவும்.
- நன்றாக வதக்கிய பின் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். நன்கு ஆறியபின் இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊறவைத்த பட்டாணியையும் சேர்த்து 3 நிமிடம் சேர்த்து வதக்கவும்.
- பின் அரைத்த மசாலாவை கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான பட்டாணி கிரேவி ரெடி.
- இந்த பட்டாணி குழம்பு சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சாதத்தில் ஊற்றி சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications