Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்
Pattani Butter Masala Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் பட்டாணியை வைத்து ஈஸியான முறையில் பட்டாணி பட்டர் மசாலா செய்து கொடுங்கள். பொதுவாக பனீரை வைத்துதான் பட்டர் மசாலா செய்வோம், ஆனால் பட்டாணியை வைத்து சூப்பரான பட்டர் மசாலா செய்யலாம்.

இந்த பட்டாணி பட்டர் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பட்டாணி பட்டர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பட்டாணி மசாலா சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு மிகவும் ஈஸியான முறையில் பட்டாணி பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ஊற வைத்த பட்டாணி - 1 கப்
அரைக்க:
- தக்காளி - 4
- பெரிய வெங்காயம் - 3
தாளிக்க:
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- தனியா தூள் - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
- ஃப்ரெஷ் க்ரீம் (Fresh cream) - சிறிதளவு
செய்முறை:
- பட்டாணியை இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிது பட்டறை சேர்த்து, அதில் சீரகம் மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வறுத்து, அவற்றை பொடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை ஒன்றாகச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயைச் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுதைச் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து, வெண்ணெய் மேலே மிதந்து வரும் வரை வதக்கவும்.
- பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மல்லித் தூள், மிளகாய் தூள், சிறிதளவு சர்க்கரை மற்றும் சிறிது நீரில் கரைத்த தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். நல்ல மணம் வரும் வரை சிறிது நேரம் வதக்கவும்.
- இறுதியாக, ஊறவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பட்டாணி நனறாக வெந்ததும் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக பிறகு, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- சப்பாத்தியுடன் சாப்பிடுவதாகிரு முன் கொஞ்சம் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications