Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இட்லி, தோசைக்கு சட்னி செஞ்சு போரடிக்குதா? இந்த பருப்பு தொகையலை செஞ்சு பாருங்க... டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!
Paruppu Chutney Recipe in Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசைதான் செய்வீர்களா? பொதுவாக இட்லி, தோசை என்றால் அதற்கு சட்னி காரமாக இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்காக எப்போதும் ஒரே மாதிரியான கார சட்னியை செய்ய முடியாதல்லவா?
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னிதான் மிகவும் எளிமையான மற்றும் சரியான சைடிஷாகும். கொஞ்சம் நேரம் கூடுதலாக இருக்கும்போது சாம்பார் வைப்போம். ஆனால் இந்த இரண்டுமே இல்லாமல் இட்லி, தோசைக்கு வேறுசில சைடிஷ்களும் உள்ளது.

நீங்கள் இன்று வீட்டில் இட்லி, தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், துவரம் பருப்பை வைத்து தொகையலை முயற்சி செய்யுங்கள். இந்த பருப்புத் தொகையல் வழக்கமான சட்னி போல இல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த தொகையலுக்காகவே இரண்டு இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்திற்கும் இது அருமையாக இருக்கும். இந்த பதிவில் துவரம் பருப்பு தொகையலை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் துவரம் பருப்பு
- அரை கப் துருவிய தேங்காய்
- 3 பல் நறுக்கிய பூண்டு
- 4 வர மிளகாய்
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி உலர வைக்கவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை சுமார் 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் துருவல் மற்றும் நறுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பின்னர் அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- பின்னர் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயத்தைச் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். முழுமையாக குளிரும் படி ஓரமாக வைக்கவும்.
- போதுமான தண்ணீர் சேர்த்து கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- தேவைப்பட்டால் தாளிக்கவும்.
- இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
- உங்களுக்கு புளிப்பு சுவை பிடிக்குமென்றால் இதனுடன் சிறிதளவு புளி சேர்த்தும் அரைக்கலாம்.
- உங்களுக்கு கரகரப்பான தொகையால் வேண்டாமென்றால் வறுத்த பருப்பை அரை 1 மணி நேரம் ஊறவைத்து விட்டு அதன்பின் மிக்ஸியில் போட்டு அரைக்கலாம். இதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிட விரும்பினால் தேங்காயை தவிர்த்து விட்டு அரைக்கவும்.



Click it and Unblock the Notifications











