Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
பன்னீர் இருந்தா.. ஒருடைம் இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.. வேற லெவல் டேஸ்ட்-ல இருக்கும்..
Paneer Pulao Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் வாங்குவீர்களா? எப்போது பன்னீரை வாங்கினாலும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பன்னீரை வித்தியாசமாக செய்து கொடுக்க கேட்கிறார்களா? அப்படியானால் பன்னீர் புலாவ் செய்யுங்கள்.
இந்த பன்னீர் புலாவ்வை எந்த வேளையிலும் செய்து சாப்பிடலாம். அதுவும் பிள்ளைகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த மற்றும் சுவையான லன்ச்பாக்ஸ் ரெசிபியும் கூட. இதுவரை நீங்கள் வீட்டில் புலாவ் செய்தது இல்லை என்றால், இந்த பக்குவத்தில் பன்னீர் கொண்டு புலாவ் செய்யுங்கள். இப்படி செய்யும் போது புலாவ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பன்னீர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பட்டாணி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பாஸ்மதி அரிசி - 1 கப் (30 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு,
சீரலகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், அதில் பொடியாக நறுக்கிய
கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
நன்கு காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி 2 நிமிடம்
வதக்கி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீரை வடிகட்டிவிட்டு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் 2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி, மிதமான தீயில்
வைத்து, 1 விசில் விட்டு இறக்கினால், சுவையான பன்னீர் புலாவ்
தயார்.



Click it and Unblock the Notifications