Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ருசியான... பன்னீர் முந்திரி கிரேவி
பன்னீரை பட்டர் மசாலாவை விட அற்புதமான ஒரு பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பன்னீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
பால் பொருட்களில் ஒன்றான பன்னீரைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றால் அது பன்னீர் பட்டர் மசாலா தான். ஆனால் இந்த பன்னீரை பட்டர் மசாலாவை விட அற்புதமான ஒரு பன்னீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பன்னீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் முந்திரி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படியுங்கள். பின் அதை வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை இலைகள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 4 (நறுக்கியது)
* முந்திரி - 15
* இஞ்சி - 2 இன்ச்
* வரமிளகாய் - 4-5
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
* பொருட்கள் நன்கு வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் முந்திரி கிரேவி தயார்!