Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
பன்னீர் புர்ஜி சாண்ட்விச்
உங்கள் வீட்டில் உள்ளோர் சாண்ட்விச்சை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்யுங்கள்.
காலை வேளையில் என்ன சமைப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சாண்ட்விச்சை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் ஒரு சுவையான சாண்ட்விச் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ருசியான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்யுங்கள். இந்த சாண்ட்விச்சிற்கு முதலில் பன்னீர் புர்ஜி செய்யுங்கள். அதன் பின் பிரட் டோஸ்ட் செய்து, அதன் நடுவே பன்னீர் புர்ஜியை வைத்து, அதன் பின் வெங்காயம், தக்காளியை வைத்து அலங்கரித்து, மேலே மற்றொரு பிரட் டோஸ்ட் வைக்க வேண்டும். இந்த பன்னீர் புர்ஜி சாண்ட்விச் செய்வது மிகவும் சுலபம் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி சாண்ட்விச் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈஸியான முறையில் பன்னீர் புர்ஜி சாண்ட்விச் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* வெண்ணெய்/நெய் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சுள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (வட்டமாக நறுக்கியது)
* தக்காளி - 1 (வட்டமாக நறுக்கியது)
* பன்னீர் - 1/4 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின் பிரட் துண்டுகளில் முன்னும் பின்னும் நெய் அல்லது வெண்ணெயை தடவி, பொன்னிறமாக டோஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின் அதில் துருவிய பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அந்த பன்னீர் மசாலாவை டோஸ்ட் செய்த பிரட் துண்டின் மீது வைத்து, அதன் மேல் வெங்காயம் மற்றும் தக்காளியை வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி, அதன் மீது மற்றொரு டோஸ்ட் செய்த பிரட் துண்டை வைக்க வேண்டும். இப்போது சுவையான பன்னீர் புர்ஜி சாண்ட்விச் தயார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications




