Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்னாக் வேணுமா? அப்ப இந்த போண்டாவை செஞ்சு சாப்பிடுங்க...!
Palak Bonda Recipe in Tamil: வீட்டில் பாலக்கீரையை வைத்து பல வகையான உணவுகளை செய்திருப்போம். மற்ற கீரைகளை போல் இல்லாமல் இது சுத்தம் செய்ய எளிது என்பதால் பலரும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள ஏற்ற ஒன்றாக இருக்கிறது.

இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம். சரி வாங்க இந்த பாலக்கீரையையோ வைத்து எப்படி போண்டா செய்து என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- பாலக் கீரை - 1 கட்டு
- அரிசி மாவு - ½ கப்
- கடலை மாவு - 1 கப்
- பெரிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- ஓம விதைகள் - 1 டீ ஸ்பூன்
- பெருங்காய தூள் - ½ டீ ஸ்பூன்
- இஞ்சி - சிறு துண்டு (2 இன்ச் அளவு)
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - 3 கொத்து
- எண்ணெய் - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் கீரையை சுத்தம் செய்து மண் இல்லாதவாறு நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
- பின் கழுவிய கீரையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை தோல் உரித்து கரும்பூஞ்சை இல்லாதவாறு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சி மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பின் அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கிளறவும்.
- அதில் ஓமம் விதைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை அணைத்து நம் கலந்து வைத்த மாவு கலவையில் சேர்க்கவும்.
- பின் அதை ஒரு கரண்டியின் நுனி பகுதியால் நன்றாக கிளறி விடவும்.
- சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கொஞ்சம் கெட்டியாக போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பொரிக்க தேவையான எண்ணெயை சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக உருட்டி போண்டா போடுவது போல எண்ணெயில் போட்டு வேக விடவும்.
- இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாக சிவந்து வந்ததும் எடுத்து ஆற விடவும்.
- கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் அருமையான பாலக் கீரை போண்டா ரெடி.



Click it and Unblock the Notifications