மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த குழம்பை செய்யுங்க...

Posted By:

Onion Mor Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் என்ன சமைப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? நீண்ட நேரம் சமையலறையில் இருக்க விரும்பவில்லையா? நீண்ட நேரம் சமையலறையில் இல்லாமல் டக்கென்று ஒரு குழம்பு செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் கெட்டி தயிர் உள்ளதா?

அப்படியானால் அந்த தயிரையும், வெங்காயத்தையும் கொண்டு ஒரு அருமையான சுவையில் மோர் குழம்பு அல்லது மோர் தாளிப்பு செய்யுங்கள். இது சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இதற்கு எந்த பொரியலும் தேவையில்லை. குறிப்பாக இது காரம் அதிகம் இல்லாமல் இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Onion Mor Kuzhambu How To Make a Vengaya Mor Kulambu Recipe

உங்களுக்கு வெங்காய மோர் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 2 இன்ச்
* கெட்டி தயிர் - 100 கிராம்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 2 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - பாதி (நீளவாக்கில் வெட்டியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் புளிக்காத கெட்டித் தயிரை எடுத்துக் கொண்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுது, சிறிது உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் 2 வரமிளகாயை உடைத்து சேர்த்து, பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, அடுப்பில் அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெங்காய மோர் குழம்பு தயார்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Monday, July 1, 2024, 12:01 [IST]
Desktop Bottom Promotion