Latest Updates
-
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கபாப் முர்க் ரெசிபி
சிக்கன் பிரியர்களுக்கு நிச்சயம் கபாப் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இந்த வாரம் சற்று வித்தியாசமான சுவை கொண்ட கபாப் ரெசிபியை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள். இது மிகவும் எளிமையான சிக்கன் ரெசிபி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
இதற்கு கபாப் முர்க் என்று பெயர். இங்கு அந்த ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் நெஞ்சுக்கறி - 2 (சிறுதுண்டுகளாக்கப்பட்டது)
எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பௌலில் சிக்கன், எலுமிச்சை சாறு, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து பிரட்டி, 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெண்ணெயை உருக்கி ஒரு பௌலில் ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து க்ரில் கம்பியில் சிக்கன், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, பின் அதன் மேல் குங்குமப்பூ வெண்ணெயை தடவி, க்ரில் மிஷினில் வைத்து வேக வைத்து எடுத்து, அதன் மேல் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பரிமாறினால், சூப்பரான கபாப் முர்க் ரெடி!!!



Click it and Unblock the Notifications