Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
காரமான பேசில் தாய் சிக்கன்
குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் விடுமுறை நாட்களில் அசைவ உணவை மூன்று வேளையில் நன்கு காரமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். இந்த வாரம் தாய் ஸ்டைலில் சிக்கனை காரமாக சமைத்து சாப்பிடுங்கள். அதிலும் துளசி இலையின் ஃப்ளேவர் சேர்த்திருக்கும் தாய் சிக்கனை தவறாமல் முயற்சித்துப் பாருங்கள்.
சரி, இப்போது அந்த காரமான பேசில் தாய் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
துளசி இலை - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மீன் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மீன் சாஸ் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துளசி இலைகளை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு அடுப்பில் உள்ள சிக்கனில் மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைவில் வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து பிரட்டினால், பேசில் தாய் சிக்கன் ரெடி!!!



Click it and Unblock the Notifications