Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மட்டன் பெப்பர் ப்ரை: ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபி
மட்டன் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதிலும் ஆந்திரா ஸ்டைலில் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் இந்த வார இறுதியில் ஆந்திரா ஸ்டைல் மட்டன் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
இங்கு அந்த மட்டன் பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2-4
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள அனத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் மட்டனை அப்படியே நீருடன் வாணலியில் ஊற்றி, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் மிளகு தூளை தூவி, 2-3 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லியை தூவினால், ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ப்ரை ரெடி!!!



Click it and Unblock the Notifications