Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மட்டன் பன்னீர் குருமா!!!

தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 1/4 கிலோ
பன்னீர் - 100
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை அதில் நனைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கொத்துக்கறியை நன்கு கழுவி, அத்துடன் சேர்த்து தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஆவி போனப் பின் குக்கரை திறந்து அந்த கொத்துக்கறியை கிளறிவிட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை வதக்கி, தேங்காய் பாலை விட்டு, சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான மட்டன் பன்னீர் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications