Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
மட்டன் பன்னீர் குருமா!!!

தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 1/4 கிலோ
பன்னீர் - 100
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை அதில் நனைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கொத்துக்கறியை நன்கு கழுவி, அத்துடன் சேர்த்து தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஆவி போனப் பின் குக்கரை திறந்து அந்த கொத்துக்கறியை கிளறிவிட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை வதக்கி, தேங்காய் பாலை விட்டு, சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான மட்டன் பன்னீர் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications