Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
மட்டன் பன்னீர் குருமா!!!

தேவையான பொருட்கள் :
கொத்துக்கறி - 1/4 கிலோ
பன்னீர் - 100
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை அதில் நனைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் கொத்துக்கறியை நன்கு கழுவி, அத்துடன் சேர்த்து தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
ஆவி போனப் பின் குக்கரை திறந்து அந்த கொத்துக்கறியை கிளறிவிட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு முறை வதக்கி, தேங்காய் பாலை விட்டு, சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின்னர் பரிமாறவும். இப்போது சுவையான மட்டன் பன்னீர் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications