Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
பக்ரீத் ஸ்பெஷல்: மட்டன் தோசை ரெசிபி
தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் தோசை. இது ஒரு சிறந்த ஆரோக்கியமான காலை உணவு. இந்த தோசையை இரவு நேரங்களில் கூட செய்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் இன்று பக்ரீத். ஆகவே இந்நாளில் சற்று வித்தியாசமாக மட்டன் தோசையை செய்து சாப்பிடலாம்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது. சரி, இப்போது அந்த மட்டன் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மட்டன் கீமா - 1/2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
5 மணிநேரம் ஆன பின்னர், அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி, கிரைண்டரில் போட்டு, தோசை மாவு பதத்திற்கு அரைத்து, தோசை மாவை 4-5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம்.
பின்னர் பச்சை பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை தோசை மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் கொண்டு தோசை ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் தோசை ரெடி!!! இதனை மட்டன் கிரேவியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications