Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
கோடி வேப்புடு: ஆந்திரா ரெசிபி
கோடு வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இந்த கோடி வேப்புடு ரெசிபியானது நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
இங்கு ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு என்னும் சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பட்டை - 1
ஏலக்காய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இறக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, எண்ணெயில் சிக்கன் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனில் உள்ள நீர் வற்றி, சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கினால், ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு ரெடி!!!



Click it and Unblock the Notifications