Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
கோடி வேப்புடு: ஆந்திரா ரெசிபி
கோடு வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இந்த கோடி வேப்புடு ரெசிபியானது நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
இங்கு ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு என்னும் சிக்கன் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பட்டை - 1
ஏலக்காய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 4-5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இறக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, எண்ணெயில் சிக்கன் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, கறிவேப்பிலை சேர்த்து, சிக்கனில் உள்ள நீர் வற்றி, சிக்கன் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கினால், ஆந்திரா ரெசிபியான கோடி வேப்புடு ரெடி!!!



Click it and Unblock the Notifications