Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
சுவையான நண்டு மசாலா

தேவையான பொருட்கள் :
நண்டு - ஒரு கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - இரண்டு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய் - அரைமூடி
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் நண்டை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேண்டிய அளவிற்கு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்ப்பூவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பைப் போட்டு பொரிய விடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீரை விட்டு கிளறவும். பின் நண்டு, உருளைகிழங்கு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் உப்பு போட்டு பிரட்டி வேகவிடவும்.
சிறிது நேரம் கழித்து நண்டு வெந்த வாசனை வந்தவுடன் இறக்கி அதன்மேல் கொத்தமல்லி தூவி மூடி வைக்கவும்.
இப்போது சுவையான நண்டு மசாலா தயார். இதனை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications