Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
சப்பாத்தி ரோல்
மாலையில் குழந்தைகளுக்கு குட்டி டிபன் போன்று ஏதாவது செய்து தர நினைத்தால், சப்பாத்தி ரோல் செய்து கொடுங்கள். ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபி என்பதால், மாலையில் விளையாடிவிட்டு சோர்ந்து போய் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் உடலில் எனர்ஜியானது அதிகரிக்கும். மேலும் இதை காலை உணவாகவும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இங்கு சப்பாத்தி ரோல் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
முட்டை - 2
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அடுத்து மஞ்சள் தூள், மிளகாள் தூள், சாம்பார் பொடி, உப்பு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது தேய்த்து சூடேற்ற வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒவ்வொரு சப்பாத்தியையும் தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சூடேற்ற வேண்டும். அப்படி சூடேற்றும் போது, இரண்டு பக்கமும் அடித்து வைத்துள்ள முட்டையை சப்பாத்தியின் மீது ஊற்றி தேய்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அந்த சப்பாத்திகளில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து ரோல் செய்தால், சப்பாத்தி ரோல் ரெடி!!!



Click it and Unblock the Notifications